முத்துப்பேட்டை விநாயகர் சிலை ஊர்வலம்
பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து போலிஸார் தடியடி



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வியாழக்கிழமை பிற்பகல் (11-09-08) அன்று நடைபெற்றது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜா, பாஜக துணைத் தலைவர் எச். ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் வழியாக இந்த ஊர்வலம் வலம் வந்தது. இதற்கு அப்பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 


இதனை இந்து முன்னணியினர் கடுமையாக ஆச்சேபித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு கற்களும். செருப்புகளும் வீசப்பட்டன. இதில், காவல் கண்காணிப்பாளர் அமீத்குமார் சிங், தலைமைக் காவலர் செல்வமணி ஆகியோர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. அப்போது போலிஸார் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து தடியடி நடத்தினர். இதனால், பள்ளிவாசலில் இருந்த பலர் காயமடைந்தனர். பின்னர் 32 முஸ்லிம்களை போலிஸார் கைது செய்தனர்.

 



செய்தியறிந்த தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ, பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி இருவரும் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு போலிஸார் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொண்டதைக் கடுமையாக் கண்டித்தனர். கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். இல்லையேல் திருவாரூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் தமுமுக எனது தலைமையில் போராட்டம் நடத்தும் என்று பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி எச்சரிக்கை விடுத்தார். பின்னர் கைது செய்யப்பட்ட 32 பேரில் 16 உடனே விடுவித்தனர்.

 


 

இன்ஷா அல்லாஹ் விரிவான செய்திகள் விரைவில்

 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved.