நெல்லை ஏர்வாடி மெயின் ரோட்டில் 6வது தெருவில் உள்ளது மெர்ஸி நர்ஸிங்
ஹோம். இங்கு தங்கும் ஒரு நர்சுடன் வெளியூரைச் சேர்ந்த (நான்குநேரி) வக்கீல் கண்ணன் என்பவருக்கு முறையற்ற உறவு இருந்துள்ளது. தினமும் இரவு அந்த வெளியூர் நபர் வருவதும் கள்ளத் தொடர்பை தொடர்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
குடும்பத்துப் பெண்கள் தங்கள் பணியின் நிமித்தம் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு முறையற்ற உறவு தொடர்வது மற்ற நர்சுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியதால் இவர்களில் சிலர் அக்கம்பக்கத்து வீட்டினர்களிடம்ஷ இதனை குமுறலுடன் கூறியுள்ளனர்.
அநீதியை தட்டிக் கேட்பதில் என்றும் சளைக்காத துடிப்புமிக்க இயக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களிடம் இந்த அநியாயம் குறித்த பொதுமக்கள் முறையிட்டனர்.
12.07.2010 அன்று வழக்கம் போல்
கள்ளத் தொடர்புக்கு வலுசேர்க்கும் விதமாக சர்ச்சைக்குரிய பேர்வழி கண்ணன் வந்தபோது இதனைஎதிர்பார்த்து காத்து இருந்த
பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். நம்ம பகுதியை கேவலப்படுத்தி விட்டானே என்ற ஆத்திரம் பொது மக்களிடையே வெடித்தது. கோபத்தோடு கூடியிருக்கும் மக்கள் தனிநபரான கண்ணனை
சரமாரியாக தாக்கினால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என எண்ணிய தமுமுக தலைவர் பக்ருதீன் கண்ணனை மருத்துவமனையில் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். அத்தோடு ஆத்திரம் அடைந்த மக்களையும் அமைதிப்படுத்தினார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சில நர்சுகள் கண்ணனை தப்பிக்க வைத்து விடுகின்றனர்.
பிடிபட்ட பேர்வழி தப்பியதை அறிந்து பொதுமக்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. கோபத்துடன் பொதுமக்கள் நாலாபுறமும் தேடத் தொடங்கினர். தப்பி ஓடி நான்குநேரி சென்ற
கண்ணன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏர்வாடி பொதுமக்களும், தமுமுகவினரும் தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தமுமுக நிர்வாகிகள் மீது நான்குநேரி காவல்துறை பொய் வழக்கு (இபிகோ பிரிவு 308) போட்டது.
13.07.2010 அன்று பக்ருதீன், அம்ஜத், முகைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தகவல்
அறிந்த தமுமுக நிர்வாகிகள் தமுமுக அலுவலகத்தில் திரண்டனர்.அலுவலகத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தமுமுகவினரின் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையைக் கண்டித்து கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. காவல் துறையினர் நியாயமற்ற முறையில் உள்நோக்கத்தோடு நடந்து கொண்டனர். மமக நகர செயலாளர் மாகின் ஊனமுற்ற சகோதரர் ஆவார். இவருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்
கூறியும் கூட காவல்துறை உதவி ஆய்வாளர் அந்தோனி அம்மா உனக்கும் தொடர்பு எனக் கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றிருக்கிறார்.இதைப்போல வஷீமீளியூர் காவல்நிலையத்தில் தமுமுகவினரை
கைது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டதோடு அவர்களை பார்க்க வந்த மாவட்ட நிர்வாகிகளை வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் பார்க்கவே அனுமதிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஏர்வாடி அருகில் உள்ள சூரங்குடியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த
சமையல் மாஸ்டர் அசன்ரபிக் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். ஆனால் கொலையை தற்கொலை என மூடி
மறைத்த காவல்துறை தற்போது தமுமுகவினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
மாநில துணைச் செயலாளர் எஸ்.காதர் மைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான் கான், பொருளாளர் புளியங்குடி செய்யது அலி,
மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் சேட்கான்,பொருளாளர் ரசூல் மைதீன்
துணை செயலாளர் நயினார் முகம்மது, சுல்தான், துணை தலைவர் சர்தார் அலிகான்
மற்றும் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர்.
-களத்தொகுப்பு எஸ்.ஒ.எஸ்






Comments
அல்லாஹ் எங்கள் இயக்கத்தினர் அநீதியை தட்டிக் கேட்பதில் என்றும் சளைக்காத துடிப்புமிக்க வர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தன் தோழர்களிடத்தில் ஒன்றை கூறுகிறார்கள். தோழர்களே! நீங்கள் உங்கள கண் முன்னால் ஒரு தவறை கண்டால் முதலில் உங்களுடைய கையால் தடுங்கள் உங்கள் கையால் தடுக்க சக்தியில்லை என்றால் உங்கள் நாவால் தடுங்கள் அதற்கும் உங்களிடத்தில் வாய்ப்பு இல்லையென்றால் கடைசியாக (மூன்றாவதாக) மனதால் வெறுத்து ஒதுங்கி விடுங்கள். இதுவே ஈமானின் கடைசி நிலை என்று சொல்லும் நபி மொழியை பின்பற்றும் தமுமுக வினர் உங்கள் பார்வையில் குற்றவாளிகளா? அல்லது செய்யும் தவறை (விபச்சாரத்தை) தடுத்தவர்களை குற்றவாளிகளாக்க ும் நீங்கள் குற்றவாளியா?
Why are you unnecessarily involving this kind of prostitution cases. Your first duty is making daava to non muslims and also you are in the right situation to make the strong the foundation of mmk. Do right and follow right. We are not government police to look out their job. this will give you a bad name tmmk's morality
உங்களை மாதிரி கோழைகள் இருக்கும் வரை நம் சமூகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது..
ஏதாவது கூற வேண்டும் என்று எதையாவது உலரதீர்கள் . . .
மனிதனாய் பிறந்தால் தீமையை தடுக்க வேண்டும் . . .
அவன் தான் மனிதன் . . .
நல்ல முஸ்லீமும் கூட . . .
The agitation held by tmmk is one the right direction,innoc ent people should be released.
உங்கள மாதிரி ஒன்னு ரெண்டு பேர் உருபடாத கருத்துகளை சொல்றதால மத்தவங்க தவறா நினைக்கிறாங்க ? உங்கள் என்னத்தை மாற்றி கொள்ளுங்கள் ?? நீங்கள் உதவி செய்யாவிட்டாலும ் பரவாயில்லை ? பிறர் செய்யும் உதவியை குறை சொல்லாதீர்கள். உங்கள் என்னத்தை மாற்றி கொள்ளுங்கள்
கள்ள தொடர்பு வச்சு இருந்த உங்களுக்கு என்னா?
அவங்க இரண்டு பெரும் ஒத்து போன்னங்கள்ள அப்புறம் என்ன?
உங்களுக்கு எவன் அதிகாரம் கொடுத்தது.
உங்கள் இயக்கத்தினர் குற்றவாளிகளே!
RSS feed for comments to this post.