
இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூட ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என் பது சர்வதேச விதியாகும்.
ஆனால், கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் தங்களது இருப்பை வெளிகாட்டுவதற்காக சமீபகால மாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.
கடந்த ஜூலை 24 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் பாஜகவினர் இதே கோரிக்கைக்காக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது தமுமுகவின் ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்திருக்கிறது. ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும், வேகமாக வருமாறு அதில் வேண்டியதால், தமுமு கவின் ஆம்புலன்ஸ் டிரைவர் தாஜுதீன் வேகமாக ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்பு லன்ஸை திருப்பினார்.
வரும் வழியில், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியை மெல்ல இரண்டா வது கியரில் நகர்த்தியிருக்கிறார்.
அப்போது காவல் துறையும் கூட்டத்தை விலக்கி, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத் தியுள்ளது. பாஜக தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் தனது தொண்டர்களிடம் ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு அறிவித்திருக்கிறார்.
எந்த விதி மீறலும் இல்லாமல், யாருக்கும் இடையூறு இல்லாமல் ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்பு லன்ஸ் சென்றுவிட்டது.
மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்று விட்டார்.
அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில், ஆம்புலன்ஸை கட்டைகளால் உடைத்து, டிரைவரை கொலை வெறியுடன் தேடி உள்ளனர். டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல் டேங்கை உடைத்து, வண்டியை துவம்சம் செய்ய, இதைப் பார்த்த பொதுமக்கள் சப்தம் போட, அதற்குள் ஓடிவந்த காவல் துறையினர் பாஜகவினர் மீது தடியடி நடத்தியதும், வன்முறை கும்பல் ஓடத் தொடங்கியது.
அதற்குள் பாஜகவினர் தங்கள் அயோக்கியத்தனத்தை மறைக்க, ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும் விதமாக வந்தது என வதந்திகளை பரப்பினர்.
ஏற்கனவே அங்கு SP முகாமிட்டு இருந்ததால், அவர் தலைமையிலான போலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங் களையும் உடைத்தனர்.
போலிசார் துரத்த தொடங் கியதும் பாஜகவினர் கொடிகளை போட்டுவிட்டு, வேனில் கட்டியி ருந்த கொடிகளை அவிழ்த்துவி ட்டு ஓடத் தொடங்கினர்.
தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப் பட்ட செய்தி அறிந்ததும் திருத்து றைப்பூண்டி நகர தமுமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மாவட்ட தலைவர் தாஜுதீன், ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ், யூசுப் உள்ளிட்டோர் தலைமையில் சாலை மறியலில் தமுமுகவினர் இறங்க, பிறகு வழக்கு தொடுத்து விட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதற்குள் நாச்சிக்குளம், கட்டி மேடு வழியாக பாஜகவினர் வாகனங்களில் திரும்பியதை தமுமுகவினர் அவர்களை மறிக்க புறப்பட்டனர்.
இதையறிந்த காவல்துறையினர் மாவட்ட தலைவர் தாஜுதீன் மூலம், தயவு செய்து பதிலடி கொடுக்காதீர்கள் எனக் கெஞ்ச, அதன்படி தாஜுதீன் நாச்சிக்குளம், கட்டிமேடு தமுமுகவினரை மறிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
செய்தியறிந்து திருவாரூர் மாவட்ட தமுமுகவினர் திருத்து றைப்பூண்டி நோக்கி விரைந்தனர். திருத்துறைப் பூண்டி நகரெங்கும் பாஜகவினரை பொதுமக்கள் காறித்துப்பாத குறையாக திட்டிக் கொண்டிருந்தனர்.
இதே, ஆம்புலன்ஸை பலமுறை பாஜகவினர் அவசரத்துக்கு பயன் படுத்தியது திருத்துறைப் பூண்டி மக்களுக்கு நன்கு தெரியும். இப்போது கூட ஒரு இந்து சமுதாய குடும்பத்துக்கு உதவதான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது என திருத்துறைப்பூண்டி மக்கள் மூலைக்கு மூலை பேசிக் கொண்டிருக்கின்றனர்.
காவல்துறை பாஜகவினரை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பிலிருந்தே அழுத்த ங்கள் அதிகரிக்க, அனைத்துக் கட்சியினரும் இந்த அராஜகத்தை கண்டித்து, தமுமுகவினருக்கு ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
அடுத்த நாள், மமக துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்கு வந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.
குற்றவாளிகள் பிடிக்கப்படாத தை கண்டித்து திருவாரூரில் ஷிறி அலுவலகம் நோக்கி கறுப்புக்கொடி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஞிமிநி அவர்கள் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும், மற்ற அதிகாரிகள் மமக துணைப் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்கு வரும் தினத்தில் கறுப்புக் கொடி ஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும், ஜூலை 30க்குள் குற்றவாளிகளை பிடிக்கிறோம் என்று கூறியதால், ஜூலை 31 அன்று கறுப்புக் கொடி ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது.
ஈவு, இரக்கமற்ற பாஜக வன்முறை கும்பலின் செயல் பொதுமக்களையே கோபப்படுத்தியது எனில், தமுமுகவினரை தமிழகமெங்கும் கொந்தளிக்க வைத்துள்ளது.
தமுமுகவினர் இதுவரை ஜனநா யகத்தை மீறவில்லை. காவல்துறை தனது கடமையை வாக்களித்தப்படி செய்யாவிடில், அதன் பின் விளை வுகளுக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். கார ணம், எங்களின் ஒவ்வொரு ஆம் புலன்ஸும் எங்களது ரத்தம், வியர்வையினால் ஓடிக் கொண் டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீது விழுந்த தாக்குதல், எங்கள் நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்கு தல்களாகும்.
பொன்ராதா கிருஷ்ணன், கறுப்பு (எ) முருகானந்தம் கைதாவார்களா?
திருத்துரைப்பூண்டி காவல் நிலையத்தில் புகுந்து உள்ளி ருப்புப் போராட்டம் நடத்தி, தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது பொய் வழக்கு போட வைத்தும், பா.ஜ.கவினரை கைது செய்யக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர் பா.ஜ.க. தலை வர் பொன் ராதாகிருஷ்ணணும், கறுப்பு (எ) முருகானந்தம் மற் றும் பா.ஜ.கவினரும்.
காவல் நிலையத்திற்குள் புகுந்து இத்தகைய அத்துமீறல்களைச் செய்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை. இல்லையெனில் இதே நடைமுறையை எல்லாக் கட்சியினரும் பின்பற்ற ஆரம் பித்து விடுவார்கள்.
திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் படாவிடில், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர முக்கிய வழக்கு ரைஞர்கள் முயற்சி எடுக்கின்றனர்.
ஒத்திவைக்கப்பட்ட கறுப்புக்கொடி ஊர்வலம்
தமுமுக ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கிய அநியா யக்கார பா.ஜ.க குண்டர் களை கண்டித்தும், காவல் துறை அவர்களைக் கைது செய்யாததைக் கண்டித்தும், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் (ஷிறி) அலுவலகம் நோக்கி தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் ஜூலை 27 அன்று கறுப்புக்கொடி ஊர்வலம் நடத் துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
தமுமுக தொண்டர்களும், ஜமாஅத்தினரும் இந்த ஊர்வ லத்தில் ஆயிரக்கணக்கில் திரளப் போகும் தகவலை உளவுத் துறையின் மூலம் தெரிந்து கொண்ட உயரதிகாரிகள் தமுமுக தலைமை நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர். மாவட்டப் பொறுப்பாளரும், மாநிலச் செயலாளருமான பேரா.ஹாஜாகனி குற்றவாளிகளைக் கைது செய்தால் இந்த ஊர்வலத்தை நிறுத்தி விடலாம் என மாவட்ட ஷிறி&யிடம் தெரிவித்தார். தமிமுன் அன்சாரியும் இதே பதிலைக் கூறினார். பொதுச்செயலாளர், ஊர்வலம் என் தமையில் தான் நடக்கப் போகிறது. நீங்கள் என்னைக் கைது செய்தாலும் பராவாயில்லை. ஊர்வலத்தை நடத்துவோம் என்றார். பிறகு SP, DIG உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பொதுச் செயலா ளரைத் தொடர்பு கொண்டு 27&ந் தேதி முதலமைச்சரின் திருவா ரூர் வருகை முடிந்தவுடன் கண்டிப்பாக குற்றவாளிகளைக் கைது செய்வோம் என உறுதிய ளித்தனர். அதைத் தொடர்ந்து கறுப்புக் கொடி ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






Comments
அப்போது இருந்த முஸ்லிம்களை விட இப்போது வீரியமிக்க முஸ்லிம்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டிருந ்தால் அதற்க்கு நாம் என்ன செய்வது.
BJP gundar galin arrajagam thodardhal tmmk vin thondargal thagunda badiladi tharuvaargal enbadhu BJP ku innum theriyavillai. thalaivargalin kattupattil dhan tmmk thondargal irrukiraargal.
manithanyam avvarkal unarum kalam vku virivil
இல்லையேல் தமுமுகவினரும்,ப ொதுமக்களும் கொத்திது எழுவோம் அவ்வாறு எழும்பொழுது அதன் விளைவுகளாக பா.ஜா.க நிறைய இழக்க வேண்டிவரும் என்பதை தமிழக காவல்துறை விளங்கி அதிவகமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறை துரிதமாக செயல்படுமா? அல்லது பொதுமக்களும் தமுமுகவும் களத்தில் இறங்கி செயல் படவேண்டுமா?
arasu vilithukkondu.
veri seyalil eedupatta bjp vanmurai kumbalgai desa paadukkaapu sattathil kaidu seyya tmmk muyarchikkvendu m.a
intha seithe veru entha nalithalilum varavillai enbathal migavum varuthamaga ullathu.
paasisa BJP vinar meedu udan nadavadikkai tamilaga arasu mun varavendum.
police should take necessary action against the rowdies, if not we will start our agitation as mentioned date.
ur's always
Jahir
An Naseer Baithulmal
TNTJ Vawaladi Branch
RSS feed for comments to this post.